வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையிலான வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த ஏழு நாட்களுக்கு இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடையும் என்றும், பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வானிலையில் மாற்றம் நிலவி வருகிறது. ஜூலை 20-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: கொளுத்தப்போகுது வெயிலு! குடையை மறந்துடாதீங்க!! தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட்! உஷார்!

அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றாலும், அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜூலை 16 முதல் 19-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை சற்று அதிகரிக்கலாம் என்றும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் சூழல் உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், மாநிலம் முழுவதும் பரவலான கனமழைக்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதன் அடுத்தகட்ட நகர்வுக்கு ஏற்ப மழை நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், இந்த புதிய வானிலை அமைப்பு காரணமாக சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் வெளியாகும் வானிலை அறிவிப்புகள் மழையின் அளவு மற்றும் பாதிப்பு குறித்து மேலும் தெளிவான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! அடுத்த 3 நாட்களில் 50 செ.மீ மழை பெய்யும்!! மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! எகிறும் பலி எண்ணிக்கை!