திமுக அரசு 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவோம் என வாக்குறுதி அளித்திருந்திருந்தது. ஆனால் இன்று வரை புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. ந்த கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 309-ன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், பணிக் கொடை வழங்க வேண்டும் எனவும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இன்று மருத்துவ விடுப்பு தவிர அரசு ஊழியர்களுக்கு எந்த விதமான தற்செயல் விடுப்பும் அளிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வாக்காள பெருமக்களே...!! - இன்றே கடைசி நாள்... எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால் என்னவாகும்?
அரசு ஊழியர்களில் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என்றும், அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
உடனடி ஒழுங்கு நடவடிக்கையாக, பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஊழியர்களின் வருகைப் பதிவு குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எச்சரிக்கை...!! அமெரிக்கா செல்ல இனி இது கட்டாயம்... சுற்றுலா பயணிகளையும் விட்டு வைக்காத டிரம்ப்...!