மதுரை மாவட்டம் உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தியும், ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைக் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், இஸ்லாமியர் சொத்துகளை சூறையாடும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தொகுதி மறு வரையறை கூடாது என்றும் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், குடியரசு துணைத் தலைவரின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தொடங்கியது திமுக பொதுக்குழு கூட்டம்.. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்..!

உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து கல்வியை மீண்டும் மாநில பட்டியலை கொண்டுவர வலியுறுத்தியும் ஏழை மக்களை வதைக்கும் நகை கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போல் இந்த கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு? மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை..!