தந்தைகளின் பங்களிப்பு, அன்பு மற்றும் தியாகத்தை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் தான் தந்தையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு, தந்தையர் தினம் இந்தியாவில் ஜூன் 15ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குடும்பத்தினர் தந்தைகளுக்கு கேக் வெட்டியும், பரிசுகள் வழங்கியும், சிறப்பு உணவு விருந்துகள் மூலம் அன்பை வெளிப்படுத்துகின்றன.

இந்நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;
"இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: அண்ணன் ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்... வேக, வேகமாக வேலையை ஆரம்பித்த கனிமொழி...!

தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தந்தையர் தினத்தையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நீங்கள் எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். நீங்கள் மிகவும் புத்திசாலியான மனிதர். நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
ஒரு தந்தையால் மட்டுமே ஒரு மகளை பராமரிக்க முடியும் என்பது போல நீங்கள் எப்போதும் என் மீது அக்கறை கொண்டிருந்தீர்கள். என் துணிச்சலை பாராட்டி உள்ளீர்கள்.

நான் ரொம்ப வலிமையானவன்னு நீங்க எப்பவும் குறை சொல்லுவீங்க, ஆனா அதுக்கும் நீங்கதான் காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?
சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி என்று தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: என் தங்கச்சி கனிமொழியை பார்க்க பெருமையா இருக்கு.. பாசத்துடன் வாழ்த்திய முதல்வர்!