2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலைகள் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் பலப்படுத்துவது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம் என்றும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இழந்த தொகுதிகளில் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் பூத் கமிட்டி அமைக்காதவர்கள் பணிகளை துரிதப்படுத்துங்கள் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். 42 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கொண்டு வந்த விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கி நிலைமை குறித்து எடுத்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ரெண்டு சீட்டுக்கு 20 பேர் நெருக்கடி! இடியாப்ப சிக்கலில் அதிமுக... திணறும் இபிஎஸ்!

தேர்தலுக்கு பல முக்கிய பணிகள் இருந்தாலும் பூத் கமிட்டி அமைப்பது மிக மிக முக்கியமான பணி என்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமாக அமைவது பூத் கமிட்டி எனவும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SIT - னாலும் தமிழ்நாடு போலீஸ் தான்...அரைவேக்காடு இபிஎஸ்! பந்தாடிய அமைச்சர் ரகுபதி