இந்தியாவின் ஜனநாயக அமைப்பின் முதுகெலும்பாக இருக்கும் தேர்தல்கள், காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாற்றமடைந்துள்ளன. 1980களின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சீட்டுகளின் சிக்கல்களான போலி வாக்குகள், காலதாமதம் மற்றும் செலவு ஆகியவற்றை குறைத்து, வாக்குப்பதிவு செயல்முறையை விரைவுபடுத்தின. இந்த இயந்திரங்கள், தேர்தல் ஆணையத்தின் (ECI) கண்காணிப்பில் தயாரிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட வாக்காளர் சரிபார்க்கும் VVPAT, ஈவிம்களின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தியது.
தேர்தலுக்கு முந்தைய சரிபார்ப்பு பணிகள், இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியான 4-6 மாதங்களுக்கு முன்பே, முதல் நிலை சோதனை தொடங்குகிறது. பொறியாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கண்காணிப்பில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பணியை மேற்கொள்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக, திருப்பூருக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள EVM இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நிர்கதியான நீர் மேலாண்மை... இதுதான் தமிழக நிலைமை... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!
5,565 பேலட் யூனிட், 3,997 கண்ட்ரோல் யூனிட், 4,295 VVPAT மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்றன. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவினர் கவனத்திற்கு..! ELECTION- ல போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் தொடர்பாக இபிஎஸ் முக்கிய அறிவிப்பு...!