தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன எனக் கூறியுள்ள நீதிமன்றம், கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது என்றும் யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன எனவும் குறிப்பிட்டனர்.
பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை என்ற சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது தொடர்பான விசாரணையில் பொது இடத்தில் கொடிக்கம்பம் அகற்ற உத்தரவிட்ட நிலையில் சென்னையில் 31% கொடிக்கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை முழுமையாக அகற்றாத ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் 40 அடி கொடிக்கம்பம்... தயார் நிலையில் பாரபத்தி!
இந்த நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், கொடிக்கம்பம் அகற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய் மாநாட்டின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து… அப்பளம் போல் நொறுங்கிய கார்!