டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாலடி பருவங்களில் நெல் சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு அணையில் மலர்களை தூவி தண்ணீரைத் திறந்து வைத்தார்.

குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 92வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்... ஆட்டத்தை ஆரம்பித்தது திமுக... பறந்தது அதிரடி உத்தரவு...!

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாகவும் நீர் இருப்பு 85.58 டிஎம்சி யாகவும் உள்ளது. இந்த நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்று உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு நெல் சாகுபடி சிறந்த முறையில் செய்யப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பல் இழித்த பச்சை துண்டு பாலிடிக்ஸ்... ஒரே போடில் எடப்பாடி பழனிசாமியை காலி செய்த ஸ்டாலின்...!