தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் மக்களுக்கு நேரடியாகச் சென்றடையச் செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு முக்கிய அங்கமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி, அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்து, புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பது என்பது தொடர்ச்சியான நடைமுறையாக உள்ளது. இது 2023-இல் தொடங்கப்பட்ட “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது.
அத்திட்டத்தில், மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றைப் பார்வையிட்டு, திட்டங்களின் செயல்பாட்டை உறுதிப்படுத்துவது முதலமைச்சரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அது முதல், பல மாவட்டங்களில் இதுபோன்ற ஆய்வுகளும் புதிய திட்டங்களின் தொடக்க விழாக்களும் நடந்து வருகின்றன.இந்தக் கள ஆய்வுகளின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உள்ளூர் மக்களுடன் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனடி தீர்வுகளை வழங்குவதோடு, முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நேற்று கள்ளக்குறிச்சியிலும் இன்று திருவண்ணாமலையிலும் கள ஆய்வு மேற்கொள்வார் என கூறப்பட்டது. நேற்று கள்ளக்குறிச்சியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின்: ரூ.2,096 கோடி நலத்திட்டங்கள்! அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார். தொடர்ந்து திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் உழவர் நல சேவை மையங்களை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: 2 மாவட்டங்களில் டைரக்ட் விசிட்... திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!