திருதிருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் அப்பகுதியை முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் ஒரு நபர் புகுந்து அதிகாரிகள் மீது டீசலை ஊற்றி தீ வைக்க முயன்ற நிகழ்வு அங்குள்ளோரை பெரும் பதற்றத்திற்குள்ளாக்கியது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பட்டா விவகாரம் இருந்தது. ராம்கி என்ற முப்பத்திரண்டு வயது இளைஞர் தான் வசித்து வந்த நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பல மாதங்களாக அலைந்து திரிந்திருக்கிறார்.
சுமார் ஐந்து மாதங்களாக அவர் தொடர்ந்து மனுக்கள் அளித்து, அலுவலகங்களுக்குச் சென்று வந்தாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அதே நிலம் தொடர்பாக வேறு ஒருவருக்குப் பட்டா வழங்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் ஆத்திரம் மேலிட்ட ராம்கி, கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.அலுவலகத்திற்குள் நுழைந்த அவர் உடன் கொண்டு வந்திருந்த டீசலை அதிகாரிகள் மீதும், அங்கு இருந்த ஆவணங்கள் மீதும் ஊற்றினார்.

தொடர்ந்து தீ வைக்க முயற்சி செய்தார். திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அலுவலகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அங்கிருந்த அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக விழித்துக்கொண்டு அவரைத் தடுக்க முற்பட்டனர். ராம்கியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். அந்தச் சமயத்தில் கொட்டியிருந்த டீசலில் வழுக்கி விழுந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: "அமுதன்... தனுஷ்"..! தொடரும் கொலைகள்..! வாயை மூடி கிடப்பது வெட்கக்கேடு..! வெளுத்து வாங்கிய உதயநிதி..!!
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.பிடிபட்ட ராம்கியை அங்கிருந்தோர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும், அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.
இதையும் படிங்க: எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!