தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை சுமார் 3 லட்சம் பேர் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதிமுக தனது முதற்கட்டமாக 23 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!
தேர்தல் ஆணையம் தளி மற்றும் ஓசூர் போன்ற தொகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மதுரவாயல் போன்ற இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: 90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!