ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச பேச்சுவார்த்தை எட்டப்படும் என நினைத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நீயா நானா என பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் தான் பேசுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம் என்று கூறிய ராமதாஸ், அன்புமணி ஒத்துப் போயிருந்தால் நானே முடிச்சுட்டு விழா நடத்தி இருப்பேன் என்று தெரிவித்தார். தந்தைக்குப் பிறகு தனையன்., எனக்கு பிறகு அன்புமணி என்பதை அனைவரும் சொல்லுவதாக தெரிவித்த அவர், தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மம் ஆகும் என்றார்.
இதையும் படிங்க: பாமகவிலிருந்து என்னை கழுத்தை பிடிச்சு தள்ளிட்டாங்க! அசிங்கமா இருக்கு... மனவேதனையில் ராமதாஸ்!

ஐயா என கூறிக்கொண்டே தன்னை அவமானப்படுத்துவதாகவும், என்னை நடை பிணமாக்கிவிட்டு என் பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் செய்யப் போகிறார்கள் என்றும் தெரிவித்தார். அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம் என்ற குற்றம் சாட்டிய ராமதாஸ், இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமை ஏற்க எனக்கு உரிமையில்லையா என கேள்வி எழுப்பினார். மேலும், என்னையே இலக்காக்கி குறி வைத்து தாக்குகின்றனர் என்று கூறிய அவர், அன்புமணியை தலைவராக்கிய போது ஆனந்த கண்ணீர் விட்டதாகவும், என் கைவிரல் வைத்து என் கண்ணை நானே குத்திக் கொண்டேன் என்றும் குலசாமி என கூறிக் கொண்டே நெஞ்சில் குத்துகின்றனர் எனவும் மனம் நொந்து பேசினார்.

2026 தேர்தலுக்குப் பின்னர் அன்புமணி தான் அனைத்தையும் பார்த்துக் கொள்ளப் போகிறார்., அன்புமணி உடனான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என நினைக்கிறேன்., அரசியலில் வாரிசு என்பதே கிடையாது., முயலுக்கு மூணு கால் என்று அன்புமணி வாதிட்டுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோபு ஒரு வக்கீலே இல்ல! ராமதாஸ் நடவடிக்கை மீது அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு..!