திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததும் சீறிப்பாய்ந்த தோட்டா... எஸ்.எஸ்.ஐ. படுகொலையில் என்கவுண்டர் - ஒருவர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான பின்னணி தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கொலையாளிகள் இருவரின் செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

தலைமுறைவாக இருந்த கொலையாளிகள் மூன்று பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், இரண்டு பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். SSI கொல்லப்பட்ட விவகாரத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் சரணடைந்தனர். மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் தலைமுறைவாக உள்ள நிலையில் நடைபெற்று வந்தன.
சிக்கனுாத்து கிராமத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
SSI படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த காவலரிடம் திருப்பூர் எஸ் பி யாதவ் க்ரிஷ் அசோக் நேரில் விசாரணை நடத்தினார்.
மணிகண்டன் தாக்கியதில் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் மணிகண்டனிடம் என்கவுண்டர் நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: துடிக்கத் துடிக்க எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏவிடம் விசாரிக்க முடிவு!