பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் துணைத் தேர்வு வகுப்புகளுக்கு அனைத்துப் பாட ஆசிரியர்களும் கண்டிப்பாகப் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, மே 16: தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, தேர்ச்சிய பெறாத மாணவர்களுக்காகத் ஜூன் மாதத்தில் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தத் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவின்படி, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களும் (Subject Teachers) எவ்வித விடுப்புமின்றி கண்டிப்பாகப் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கோடை விடுமுறைக் காலம் என்பதால் ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு வருவதில் சுணக்கம் காட்டலாம் என்பதைக் கணக்கில் கொண்டு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகளைப் புறக்கணிக்கும் அல்லது பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் தனது எச்சரிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நாளை காலை 9.30 மணிக்கு வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தோல்வி அடைந்த மாணவர்களைக் கைவிட்டுவிடாமல், அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி மீண்டும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்கிற கல்வித்துறையின் இந்த அதிரடி உத்தரவு பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!