தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, அதிமுக ஆட்சி அமைத்தால் அது கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறுவதாக வெளியான தகவல்கள், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ளன.
ஆனால், இந்தக் கூற்றுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஏப்ரல் 16 அன்று, சென்னை சட்டமன்றத்தில் பேட்டியளித்த EPS, அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. அவர் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மட்டுமே கூறினார். தமிழ்நாட்டில் ஒரு தனி கட்சி ஆட்சி அமைக்கும்., கூட்டணி ஆட்சி இருக்காது என்று தெளிவுபடுத்தினார். அவர், தேர்தல் கூட்டணி மட்டுமே, ஆட்சி பகிர்வு இல்லை என்று கூறினார்.

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்து சாறை அவர்கள் குடித்து விடுகிறார்கள் என்றும் சக்கையை நாங்கள் பார்க்கும் சூழ்நிலைதான் உள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !
நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவோம் என்றும் அரசாங்கத்திலும் ஆட்சியிலும் நாங்கள் பங்கு பெறுவோம் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனவும் கூறினார் . NDA கூட்டணியை விமர்சித்து வந்த நிலையில், இந்தியா கூட்டணியில் கூட கூட்டணி ஆட்சி விவகாரம் தலைதூக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ஆமை புகுந்த வீடும்... பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது! விளாசிய ப. சிதம்பரம்