விஜயின், திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் பொழுதும் பல இடர்பாடுகளையும் போராட்டங்களையும் சந்தித்த பின்னரே வெளியாகும். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான 'தலைவா' திரைப்படம் கண்ட இடர்பாடுகள் அதிகம் என்றே கூறலாம். இப்படி இந்த உலகத்திற்கு நடிகராய் அவதரித்த விஜய் அரசியல் களத்தில் இறங்கி மக்களின் நலனில் பணியாற்றுவார் என ஒருநாளும் ஒருவரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று நடிகர் விஜய் தனது முழு சினிமா பயணத்தையும் முடித்துக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவிக்க அனைவரும் ஆட்டம் கண்டு போயியுள்ளனர்.

ஆம்.. இன்று நம் முன் ஷைனிங்காக நிற்கும் விஜயின் உழைப்பு என்பது மிகவும் பெரியது, அவரை குறித்து பார்த்தால் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த விஜய் நாளடைவில் அவரது தந்தையின் உதவியுடன் கதாநாயகனாக 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் விஜயை இப்படத்தில் பார்த்த மக்கள் முதலில் அவரை ஏற்று கொள்ளவில்லை அதன் பின், நடிகர் விஜயகாந்த்துடன் "செந்தூரப் பாண்டி" என்ற திரைப்படத்தில் விஜய் இணைந்து நடித்தார். அடுத்து விஜய் நடித்த "ரசிகன்" படத்தில் இவரது நடிப்பை பார்த்த பின்பு இவரை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த ரசிகர்கள் அவருக்கு "இளைய தளபதி" என்ற அடைமொழி பெயர் வைத்து கொண்டாடினர். இப்படி பல படங்களில் நடித்த விஜயின் முதல் பத்து படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அதன்பின் வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக ஆரம்பித்தது.
இதையும் படிங்க: பெண் பிள்ளைகள் மீது விஜய் கைபோடுறாரா.. துடுக்காக பேசிய வேல்முருகனை திணறடிக்க செய்த தாடி பாலாஜி..!

இதனை தொடர்ந்து 1996-ல், இயக்குநர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வரிசையாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, மின்சாரக் கண்ணா என 90காலங்களை தாண்டி 2000த்திலும் காலடி எடுத்து வைத்தார். அதில் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜஹான், யூத் ,பகவதி, வசீகரா, சிவகாசி, போக்கிரி, குருவி, தெறி,பிகில்,வாரிசு, மெர்சல் என பல படங்களை நடித்து தனது கடின உழைப்பால் இன்று ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.

இப்படி 1992ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா பயணம் 2025ம் ஆண்டு முடிவடைந்துள்ளது என்றே கூறலாம். காரணம் தமிழக வெற்றி கழகத்தில் தலைவராக இருக்கும் விஜய், தற்பொழுது 'ஜனநாயகன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் கதை மற்றும் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை பார்த்தால், அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் விஜய் முழு நேர அரசியலில் ஈடுட்டு மற்ற காட்சிகளை தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தால் துவம்சம் செய்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் விஜயின் தவெக கட்சியில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைய இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் இருவரது காம்போவும் அழகாக இருந்ததால் அரசியலிலும் இவர்களது காம்போ அமோகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜயின் அரசியல் பயணத்தை குறித்தும் தன்னை அக்கட்சியில் இணைய உள்ளதாக பலரும் கூறும் செய்திகளுக்கும் அர்ஜுன் தரப்பில் இருந்து பதில் கிடைத்துள்ளது. அதில், " நடிகர் அர்ஜூன் தற்பொழுது நடிப்பு, இயக்கம் என மிகவும் பிஸியாக இருக்கிறார். எல்லோரும் நினைப்பதை போல் அவர் தேசப்பற்று மிகுந்தவர் தான், ஆனால் அதனை தனது படங்களில் முழுமையாக காண்பிப்பார், தனது செயல்களில் காண்பிப்பார் என்பது நாங்கள் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. மற்றபடி அவருக்கு அரசியலில் எல்லாம் துளி கூட ஆர்வம் இல்லை. ஆதலால் விஜயின் த.வெ.க.கட்சியில் அர்ஜுன் இணையப்போகிறார் என்று வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படம் உன்னுது ரைட்ஸ் என்னது..! ஒரு சீனுக்காக படத்தையே வாங்கிய ஜனநாயகன் டீம்..!