தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்கள் வரிசையில் முக்கியமான ஒருவராக பார்க்கப்பட்டவர் தான் ஐசரி கணேஷ். இவரது மகள் ப்ரீத்தாவின் திருமணம் மே மாதம் 9ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு அடுத்த நாள் 250திற்கும் மேற்பட்ட திரை மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு பிரமாண்ட விருந்தும் அன்றைய தினமே அவரது மகளுக்கு ரிஷப்ஷனும் வைத்திருந்தார்.

இப்படி இருக்க, ஒரு புறம் திரை பிரபலங்களை வரவேற்ற ஐசரி கணேஷ், மறுபக்கம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்களையும், நன்றாக வாழ்ந்தவர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு மனதார உணவளித்து தனக்கும் தனது மகளுக்கும் மருமகனுக்கும் ஆசீர்வாதங்களை குவித்தார். அவரது இந்த செயல் பலரையும் ஆச்சர்ய பட வைத்ததுடன் கண்களில் கண்ணீரும் வரவழைத்தது.
இதையும் படிங்க: இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..! விவாகரத்து பிரச்சனை நடுவில் ரவி மோகன் செய்த தரமான சம்பவம்..!

இப்படிப்பட்ட ரிஷப்ஷனில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், பிரபு, விக்ரம்,. ரவி, மணி ரத்னம், ஆதிக் ரவிச்சந்திரன்,வெற்றி மாறன், பி.வாசு, மாரி செல்வராஜ், ஆகியோர் திருமணத்திலும் ரிஷப்ஷனிலும் கலந்து கொண்டனர். பல கோடி ரூபாய செலவு செய்து பிரமாண்டமாக தனது மகளின் திருமணத்தை ஐசரி கணேஷ் நடத்தினாலும், அவரது மகளின் திருமணத்தை காலம் கடந்தாலும் மறக்க முடியாமல் இருக்க செய்த பெருமை நடிகர் ரவி மோகனையே சேரும்.

காரணம் அவரது மகள் திருமணத்தில் சேம் கலர் ட்ரெடிஷ்னல் உடை அணிந்து ரவி மோகனும், கெனிஷாவும் ஒன்றாக கைகோர்த்தபடி வந்து இறங்க ஊர் கண்ணே படும் அளவிற்கு திருஷ்டி இவர்கள் இருவர் மீதும் விழ துவங்கியது. இதனை அனைவரும் தனது போனில் போட்டோ எடுத்து ரவி மோகன் காதலி பாடகி தான் என மறுகணமே பதிவிட்டு வந்தனர். ஆதலால் இந்த திருமண நிகழ்வில் எப்பொழுது ரவிமோகன் அடியெடுத்து வைத்தாரோ அப்போதிலிருந்து ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் ஜோடியாக வந்த ரவி மோகன் கெனிஷா என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இப்படி இருக்க, தனது மகளுக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்த ஐசரி கணேஷ், மகளுக்கும் மருமகனுக்கும் பிரமாண்டமான பரிசு கொடுக்காமலா இருந்திருப்பார். அதனையும் தற்பொழுது வழங்கியிருக்கிறார். அதன்படி, தனது மகளுக்காக ஒரு பெரிய பிரம்மாண்டமான பீச் ஹவுஸ் ஒன்றை கட்டி, மகள் திருமணத்திற்கு பரிசாக வழங்கி இருக்கிறார் ஐசரி கணேஷ். அதன் மதிப்பு பல நூறு கோடி என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோபித்து கொண்ட ராஜேஷை வீடு தேடி வந்து சந்தித்தார் எம்.ஜி.ஆர்..! மனம் திறந்த நடிகர் கூல் சுரேஷ்..!