ஜெயம் ரவி என்று அழைப்பதை சற்று நிறுத்தி இனி வரும் காலங்களில் ' ரவி மோகன்' என்ற உண்மையான பெயரில் மட்டும் தன்னை அழையுங்கள். அதுவே எனக்கு பிடிக்கும் என்ற இவர், தமிழில் அவருடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். இதனால் தான் ரவி மோகன் என்ற இவரது பெயர் மக்களால் ஜெயம் ரவி என மாறியது. இதனை அடுத்து "எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி" என்ற படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

பல பெண்களின் மனதில் கதாநாயகனாகவும் திகழ்ந்தார், அதற்கு பின் தாஸ், மழை, இதயத் திருடன்,சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன், நினைத்தது யாரோ, நிமிர்ந்து நில், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மற்றும் அடங்கமாறு இன்னும் பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: சட்டம் தன் கடமையை செய்யும்.. பாடகி கெனிஷா வெளியிட்ட பகீர் அறிக்கை..! சரண்டரான நெட்டிசன்கள்..!

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிபில், ஏ.ஆர்.ரகுமான் இசையில்,சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோருடன் ரவிமோகன் இணைந்து நடித்துள்ள "ஜீனி" படம் வெளியாக உள்ளது அதே போல், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். மேலும், கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வரும், தனது 34வது படமான, 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படியாக தற்பொழுது மூன்று படங்களை தன் வசம் வைத்துள்ளார் நடிகர் ரவிமோகன்.

இதனை தொடர்ந்து, இவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு எடுத்து அதற்க்கான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவாகரத்து பெற்ற பின்னர் பாடகி கெனிஷாவை திருமணம் செய்யவும் உள்ளார். இப்படி இருக்க, அவரது மனைவி ஆர்த்தி ரவி ஜீவனாம்சமாக மாதம் தோறும் ரூ.40 லட்சம் கேட்டதாலோ அல்லவோ தெரியவில்லை ரவி மோகன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதன்படி அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், " இந்த புனிதமான நாளில், #ரவிமோகன் ஸ்டுடியோவின் லோகோவை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!!! விரைவில் உற்சாகமான புதுப்பிப்புகள் உங்களைத் தேடி வரும்...காத்திருங்கள் " என பதிவிட்டு தனது லோகோவையும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவரது லோகோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி 2 பேரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!