ஈரானின் ஏவுகணை தாக்கத்தில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கட்டடங்கள் உருக்குலைந்து காணப்படும் நிலையில் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

இதற்கு பதிலாக ஈரான் தலைமையகத்தை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தி உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் லேசான சேதம் ஏற்பட்டதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே தாக்கிய அழித்துவிட்டதாகவும் கூறிக் உள்ளது. ஈரானின் அணு ஆயுத மையங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஈரான் மாறி மாறி வான்வழி தாக்குதல் நடத்திக் கொள்கிறது. ஈரானில் இருந்து சரமாரியாக ஏவுகணை வீசப்பட்டதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தொடரும் ட்ரோன் தாக்குதல்.. அசாதாரண சூழல்.. இந்தியர்களுக்கு அதி முக்கிய அறிவிப்பு!

இதனிடையே அமெரிக்காவைப் பற்றிய தொலைபேசி எண் தொடர்பு கொண்டு ரஷ்ய அதிபர் புதின் பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளார். ட்ரம்பிடம் பேசிய ரஷ்ய அதிபர், ஈரான் நாட்டின் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சம் இருங்க பாய்..! குலை நடுங்க வைக்கும் ஈரான்.. அலறி துடிக்கும் இஸ்ரேல்..!