புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாஜகவில் இருந்து விலகியவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டது, அக்கட்சியின் அரசியல் உத்தியின் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடைய இரு முன்னாள் தலைவர்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நேயம் மக்கள் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கியது.
பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதில் கொடுக்காமல் சென்ற சம்பவம் பேச பொருளாக மாறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் உதவியாளர் பாஸ்கரன் என்பவருடைய மகன் சேரலாதன் என்பவருக்கும் திருக்கோவிலூரை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மணமக்களை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டனர்.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்..! புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி... திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!!
காங்கிரஸ் கட்சியில் விருப்பமானது தாக்கல் செய்தவர்கள் நாங்கள் மனுவை திரும்ப பெற மாட்டோம் என்ற கேள்விக்கு அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் முதலமைச்சர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி..! சுயேட்சை எம்எல்ஏ-வின் மாஸ் முடிவு..!! அதிரும் புதுவை..!!