தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் இன்றைய கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது.

இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 2 பேர் கர்ப்பிணிகள் என கூறப்படுகிறது. கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெசு துணையாக இருக்கும் என தவெக வழக்கறிஞர் அணி தெரிவித்து உள்ளனர். தவெக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அறிவழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்... உதவி எண்கள் அறிவிப்பு..!!
அப்போது, இறப்பு செய்தி அறிந்த உடன் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார் என்றும் காவல் துறையினரின் நிபந்தனைகளை பின்பற்றியே இதுவரை விஜய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் எனவும் விளக்கம் அளித்தார். விரைவில் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுப்பார் என கூறினார்.
இதையும் படிங்க: பெரும் துயரச்சம்பவம்.. கரூரில் முழு கடையடைப்பு.. தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு..!!