புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் கண்ணன் (32), கார்த்திக் (28) இருவரும் கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அடியார் குளக்கரையில் அமர்ந்து கண்ணன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார், தம்பி கார்த்திக் சற்று தூரத்தில் அமர்ந்து செல்ஃபோன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கே வந்த மர்ம கும்பல் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளது. இதனை பார்த்த தம்பி கார்த்திக் ஓடி வந்து தடுக்க முயன்றுள்ளார், அப்போது அவரையும் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு நீதி வேண்டும்.. எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உறவினர்கள் மறியல் போராட்டம்..!
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரையும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிதம்பரம் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கூலித்தொழிலாளி பகீர் வாக்குமூலம்..!