தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. தனிநபர்கள் நடத்தி வரும் இந்த இல்லத்தில் வயதானவர்கள் ஆதரவற்றோர் உட்பட 60-க்கு மேற்பட்டோர் தங்கி உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் அங்கு தங்கி உள்ளவர்கள் அசைவம் மற்றும் சைவ உணவு அருந்தி உள்ளனர். இதை எடுத்து புதன்கிழமை இரவில் திடீரென 11 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த முதியோர் இல்ல நிர்வாகிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரையும் தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையை சேர்ந்த 48 வயதான சங்கர் கணேஷ், 45 வயதான முருகம்மாள் மற்றும் சொக்கம்பட்டியை சேர்ந்த 40 வயதான அம்பிகா ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை சிகிச்சையில் இருந்த தனலட்சுமி என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராமலட்சுமி, இசக்கியம்மாள், மாரியம்மாள், மும்தாஜ், கருப்பாயி, செல்வராஜ், காளியப்பன், மீனாட்சி சுந்தரம் ஆகிய 8 பேரும் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாரியம்மாளுக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் சாப்பிட்ட உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு 11 பேருக்கு உடல்நலம் பாதித்தது தெரிய வந்துள்ளது. இருந்தபோதும் உடற்கூறாய்வு முடிவிற்கு பின்னர்தான் நான்கு பேரின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் முதியோர் காப்பகத்தில் தரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டதா? சம்பவத்திருந்து தயாரிக்கப்பட்ட இரவு உணவு விஷமாக மாறியது ஏன் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் எங்க அப்பா..!! கொச்சையாக பேசிய வேல்முருகன்.. மாணவியின் சாட்டையடி பதில்..!
இதற்கிடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்ததுறை அதிகாரிகளும் முதியூர் இல்லத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மசாலா உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். ஆய்வு முடிவில்தான் உணவு பொருள் விஷமானதா என்பது குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையில இருந்து சில உணவு சில பேருக்கு உடம்பு சரி இல்லாம இருந்திருக்கு. ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துருக்காங்க. இப்ப இந்த ரெண்டு நாளா சில பேருக்கு அதிகமான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. வந்ததுனால அவங்க ஹாஸ்பிடல்ல போயிட்டு ஹாஸ்பிடல்ல இருந்துதான் இறந்துருக்காங்க. அதனால மீதி இருக்கிற 65 பேரிடம் உணவு பாதுகாப்பு துறை சுகாதாரத்ததுறை மற்றும் மாவட்ட நிர்வாக சார்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவர்கள் அனைவருக்கும் மட்டன் கறி பறிமாறப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டோர் அனைவரும் மாட்டு மாமிச உணவு அருந்தியதாகவும் அதன் காரணமாக செரிமான கோளாறு ஏற்பட்டு வாந்தி பேதி ஏற்பட்டதாக சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் வாந்தி மற்றும் கழிவுகளில் இருந்து மாதிரிகளை எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முதியோர் இல்லத்தில் இருந்து குடிதண்ணீர் மாதிரிகளையும் சேகரித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: செத்துட்டேன்னு தான் நினைச்சேன்! உயிர் பிழைச்சதை நம்ப முடியல! மவுனம் கலைத்தார் விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்..