தேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறி கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள், என்சிபி அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக சென்னை, புதுச்சேரி என மொத்தம் 15 இடங்களில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் கூட்டாக நிகழ்த்தினர். இந்த தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தான் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டத. அவரது வங்கி பண பரிவர்த்தனை இரண்டு வருடங்களுக்கு அவர்
மேற்கொண்ட பண பரிவர்த்தனை அதேபோல அவர் போதை பொருள அவருக்கு கிடைத்த பணம் மூலமாக ஏதேனும் சட்ட விரோதமாக அவர் வந்து பணம்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுருந்தாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பட்டினம்பாகத்தில் இருக்கக்கூடிய ஜாபர் சாதிக்கின் வீடு, எலும்பூரில் இருக்கக்கூடிய அவரது விடுதி உள்ளிட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் சென்னையில் மட்டுமே இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: பக்கா மாஸ்...!! - விடிந்ததுமே ஃபுல் எனர்ஜியோடு திருவண்ணாமலையில் களமிறங்கிய ஸ்டாலின்... மக்களோடு மக்களாக வாக்கு சேகரிப்பு..!
ஏற்கனவே அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்ற நிலையில், அவரது பட்டினம்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மட்டும் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையின் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மற்றும் சோதனையை மேற்கொண்டு வந்தனர்.
அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையும் நிறைவு பெற்றிருக்கிறது. அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் என்ன மாதிரியான ஆவணங்கள் சிக்கியது என்பது குறித்தான தகவல்களை விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: காலையிலேயே ஹேப்பி நியூஸ்... அடுத்த தரமான சம்பவத்திற்கு தயாராகும் விஜய்... தவெகவினர் கொண்டாட்டம்...!