அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்டாலின் அரசு சிலரை காப்பாற்ற நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என்று கூறியுள்ளார்.

விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருப்பதாகவும், இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மண், மொழி காக்க ஒன்றிணைவோம்.. திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!

இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடு பொடியாக்கியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம்.. பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய முடிவு..!