தேர்தலில் எந்த கட்சி அல்லது கூட்டணி முன்னிலை வகிக்கிறது என்பதை மதிப்பிடவும் வாக்காளர்களின் மனநிலையை புரிந்துகொள்ளவும், தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முயற்சிக்கவும் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, லயோலா கருத்துக்கணிப்பு என்பது சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் People Studies அமைப்பு அல்லது தொடர்புடைய ஆய்வுக் குழுக்களால் நடத்தப்படும் பொது மக்களின் கருத்தை அறியும் ஆய்வு முறை. இது பொதுவாக அரசியல் தேர்தல்கள், மக்களின் வாக்கு நிலை, அரசியல் தலைவர்களின் பிரபலம், அல்லது சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மக்களின் கருத்துகளை அளவிடுவதற்காக நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

இந்தக் கருத்துக்கணிப்புகள் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க கவனம் பெறுகின்றன. அதன்படி, லயோலா முன்னாள் மாணவர்கள் தொடங்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் வர வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 77.83% பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். 73.80% பேர் எடப்பாடி பழனிசாமியும், 67.99% பேர் உதயநிதி ஸ்டாலின், 64.58% பேர் அண்ணாமலை, 60.58% பேர் விஜயும் அடுத்த முதல்வராகலாம் என கூறியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?