தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் என்னென்ன பயன்களை பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் பெண்கள், மாணவ மாணவியர், வயது முதிர்ந்தோர், தொழில் துறையினர் போன்ற பல தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்ததிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றின் மூலம் பயன்பெற பொதுமக்கள் இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கடைக்கோடி ஏழை எளிய மக்கள், வறுமை நிலையில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் என அனைத்து நிலை மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!

ஜூன் நான்காம் தேதி முதல் இந்த முகாம் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. பல்வேறு காரணங்களை முன்னிட்டு நீண்ட நாட்களாக பட்டா மாறுதல் செய்ய முடியாமல் இருப்பது, தனி பட்டாவாக மாற்ற முடியாமல் இருப்பது, முதியோர் உதவி த்தொகை பெற முடியாமல் இருப்பது, புதிய தொழில் தொடங்க கடன் உதவி, புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த முகாமில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படும்.

இதற்காக மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட வருவாய் அலுவளர் உட்பட அனைத்து முதல்நிலை அலுவலர்களும் முகாம் நடைபெறும் ஊராட்சிகளில் பொதுமக்களை தேடி மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக வருகை தருவார்கள். வேளாண்மை துறை, ஆதி திராவிடர் நலத்துறை, டாட்கோ, தொழிலாளர் நலத்துறை, சுகாதாரதத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற முடியாமல் இருக்கும். பயனாளிகள் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தால் முறையாக விசாரித்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்ததிட்டங்கள் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.
இதையும் படிங்க: முதலுக்கே மோசம்.. அதிமுக மனுக்களை ஏற்க கூடாது.. தேர்தல் அதிகாரிகளிடம் கடும் வாதம்!!