சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (ஜூன் 21) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 22) ஆகிய தேதிகளில் முழு நிரம்பிய நிலையில் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரு நாட்களும் பொதுமக்களுக்கு இலவச நுழைவு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு, ஆன்லைன் முன்பதிவுகள் முழுமையாக நிரம்பிவிட்டன.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். முதலமைச்சரின் பிறந்தநாளான ஜூன் 22ஐ கொண்டாடும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டம் அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகிய மூன்று இடங்களிலும் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அனைத்து வயதினருக்கும் இலவச நுழைவு வழங்க முடிவு செய்யப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இருப்பினும், இலவச அனுமதி என்றாலும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. நேரடியாக பூங்காவுக்கு வந்து டிக்கெட் வாங்க முடியாது. அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. வண்டலூர் பூங்காவில் ஒரு நாளைக்கு 50,000 டிக்கெட்டுகள் வரை கேப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இதையும் படிங்க: புதிய திசைக் காட்டும் CM விஜய்... IPS, IAS மெகா மாநாடு... அதிரடி அறிவிப்பு..!
வண்டலூர் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் நேரடி டிக்கெட் வழங்கப்படாது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் . அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தவெக அரசின் வெள்ளை அறிக்கை... மரபு தெரியுமா..? சட்டபேரவையில் காரசார வாதம்..!