தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்கும் வகையில் அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கான பேருந்து பயணச் சலுகைகள் குறித்த முக்கிய விவரங்களை அமைச்சர் தமிழன் பார்த்திபன் இன்று செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். வறுமை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக எந்தவொரு மாணவரின் கல்வியும் தடைபடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிச் சீருடையில் (Uniform) இருந்தால் மட்டும் போதும், அவர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை அரசுப் பேருந்துகளில் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகப் பயணிக்கலாம். அதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டையைக் (ID Card) காண்பித்து அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் தடையின்றிப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் பாஸ்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு முழுமையாக விநியோகிக்கப்படும் வரை, இந்த அடையாள அட்டை மற்றும் சீருடை அடிப்படையிலான கட்டணமில்லா பயண நடைமுறை அமலில் இருக்கும் என்றும், மாணவர்களைக் பேருந்துகளில் ஏற்றுவதில் நடத்துநர்கள் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்..!! குஷியில் பெண்கள்..!!
இதையும் படிங்க: காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!