தமிழ்நாடு, தனது சமூக நீதி அரசியலின் முன்னோடியாக இருந்தாலும், சாதி அடையாளங்கள் இன்னும் சமூகத்தின் நிழலாகத் திகழ்கின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சாதி சார்ந்த பெயர்களைத் தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் என்பவற்றிலிருந்து நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது வெறும் பெயர் மாற்றமல்ல. சமூகத்தில் சாதியின் பிணைப்புகளை அறுத்து, சமத்துவத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படி. ஏப்ரல் 29 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த இந்த உத்தரவு, தமிழகத்தின் சமூக மாற்றப் போராட்டத்தின் தொடர்ச்சி. இந்த சாதிப்பெயர் நீக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றாலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள தான் செய்கிறது.
இதனிடையே சாதிப் பெயர்களை நீக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் நீர்நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சாலை மற்றும் தெருக்களின் பெயரில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சாலை, தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாதிய பெயரை நீக்கும் அரசின் முடிவு தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கு அனுமதி அளித்தது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் உடலுறவு... குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த முடியாது... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!
முன்னறிவிப்பு இன்றி இவ்வாறு செய்தால் மக்கள் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வார்கள் என கூறி அரசாணைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வழிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சாலை மற்றும் தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு எதிரான இடைக்கால தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரை கொலை ஆணை பிறப்பித்துள்ளது. பெயர்களை மாற்றம் விவகாரத்தில் என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அரசு தரப்பில் இன்றைய தினம் கால அவகாசம் கேட்கப்பட்டது. எனவே சாதிப்பெயர் நீக்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று கூறி மனு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்... வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு செம்ம ட்ரீட்...!