1999 முதல் 2000 வரை இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என வெற்றிமாறன் கூறிவந்தார். ஏனெனில் அவர் வெற்றிமாறனுடன் இணைந்து ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான விக்ரம் சுகுமாரன், சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்திலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன், கதிர், ஓவியாவை வைத்து மதயானைக் கூட்டம் என்ற படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார்.
இதையும் படிங்க: இந்தியில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து'.. கெத்துவாக மாறப் போகும் ஷாரூக் கான்..!

இந்த நிலையில் நேற்று சொந்த ஊரான மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இராணவக்கோட்டம் படத்தில் நடித்திருந்த நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா... Proud Parents ஆக மாறிய நெகிழ்ச்சி தருணம்!!