தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் பயிலும் மாணவர்கள், நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராக, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இது வசதியற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு குறைகிறது.

நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டு முறையை பலவீனப்படுத்துவதாகவும், பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களின் வாய்ப்புகளை குறைப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும், நீட் தேர்வு, தகுதியற்றவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதாகவும், தமிழகத்தின் மருத்துவத் தரத்தை பாதிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. யார் அதிக மதிப்பெண்கள்? மாணவர்களா அல்லது மாணவிகளா??
இது மட்டுமல்லாது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்துள்ளன. இது தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், நீட் தேர்வு மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், சிலர் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது., நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையையும் தமிழகத்தில் திமுக அரசு எடுத்துரைத்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மருத்துவர் சந்தீப் ஜவஹர் ஷா என்பவர் தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகள் சிலருடன் இணைந்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ அதிகாரி தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தரம், தரம் என்றார்கள்., தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என்று குற்றம்சாட்டி உள்ளார்.

நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல் என்றும் அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான் எனவும் தெரிவித்தார். நீட் என்பது முதல் கோணல் முற்றிலும் கோணல் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மாநாடுகளில் ஷோ பீஸ்- ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: நீட் முடிவுகள்... ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறாத நிலை... தமிழகம் பின்னடைவு!