நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், அமைச்சர் சேகர்பாபு சபரிமலைக்கு போகக்கூடிய நல்ல பக்தர். அவர் இருக்கக்கூடிய இடம் சரியில்லை. அமைச்சர் சேகர்பாபு சரியில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். முருகன் தான் அதைப் பற்றி கேட்பார்.

ஞானசேகரன் வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது சரியில்லை. குற்ற பத்திரிக்கையை சரியாக தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும். இந்த வழக்கை சிபிஐ தான் விசாரித்திருக்க வேண்டும். எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்.

ஒரத்தநாட்டில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் எல்லாம் ஏன் 157 நாட்களில் விசாரிக்கப்படவில்லை. காவல்துறை தங்களது பணியை செய்வதே இல்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. காவல்துறையின் ஈரல் புரையோடி விட்டது.
இதையும் படிங்க: அடுத்த இடி.. பேருந்து கட்டணத்தை திமுக அரசு உயர்த்தப் போகுது.. ஷாக் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்!

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கிறது அந்த மொழி எந்த மொழி என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் பாஜக விரும்புகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சொல்லி இருக்கிறார் தேர்தலில் பெட்டி பெட்டியாக பணம் இறக்குவார்கள் என்று.

அந்த வகையில் இந்த முறை திமுக பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தோற்பது உறுதி. ஆட்சி மாற்றம் உறுதி. பாமகவில் இருப்பது உட்கட்சி பிரச்சனை அது பற்றி பேச முடியாது பாமக எங்களோடு கூட்டணியில் தொடரும் என்றார்.
இதையும் படிங்க: உங்க துருப்பிடித்து போன இரும்புக் கரத்தை ரிப்பேர் பண்ணுங்க.. முதல்வர் ஸ்டாலினை நயினார் பங்கம்!