ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முதல்கட்ட ஆன்மிகப் பயணமானது ஜூலை 11ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 2,000 மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திருமாவளவன் மீது பூக்கள் தூவ ரூ.9 லட்சமா? ஹெலிகாப்டர் வைத்து மாஸ் காட்டும் விசிக!!

அதேபோல் மதுரையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களையும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களையும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வரும் ஜூலை 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: நான் போலி விவசாயியா? சொல்லுற தகுதி உங்களுக்கு இல்ல ஸ்டாலின்..! இபிஎஸ் தாக்கு...