திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: திருப்பூர் SI கொலை சம்பவம்.. கொலையாளிகளின் செல்போன்கள் சிக்கின! திடுக்கிடும் தகவல்கள்..!
ரோந்து பணிக்காக சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர், எம் எல் ஏ வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான பின்னணி தொடர்பாக விசாரித்து வருகின்றனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவல் ஆய்வாளர் சண்முக வேலை கொலை செய்தவர்கள் வேடசந்தூரை சேர்ந்தவர்கள் என்று கூறினார். தோட்டத்தில் வேலை செய்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
அப்போது, சமாதானம் செய்து வைக்க வந்த குடிமங்கலம் எஸ்ஐ சண்முகவேல் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மூர்த்தி மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் என்றும் மற்ற இருவரும் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது எனவும் எம்எல்ஏ மகேந்திரன் தெரிவித்தார்.
அவர்களின் ஆதார் அட்டை, செல்போன் எண்கள், அவர்களின் குழந்தை படிக்கும் பள்ளிக்கூட விபரம் உள்ளிட்ட அனைத்தும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்
மேலும், பணியின் போது இறந்ததால் அவரது மகனுக்கு இதே காவல்துறையில் தமிழக அரசு பணியாணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: திருப்பூர் SI கொலை சம்பவம்.. கொலையாளிகளின் செல்போன்கள் சிக்கின! திடுக்கிடும் தகவல்கள்..!