தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் சி. ஜோசப் விஜய். நேற்று நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தின் நினைவுகளை மீண்டும் எழுப்பியதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. முதலமைச்சர் விஜய் கரூருக்கு வருகை தந்ததன் முக்கிய நோக்கம், கடந்த ஆண்டு தன் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்திப்பதும், அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும், உதவிகளை வழங்குவதும்தான்.
நிகழ்ச்சியில் 31 பேருக்கு அரசு வேலை நியமன ஆணைகளை நேரடியாக வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உறுதிப்படுத்தினார். கரூர் சம்பவத்திற்கு ஒரு நினைவிடம் அமைக்கவும் அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் துயரம் தன்னை இன்னும் வாட்டுவதாக உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என தெரிவித்தார்.

திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆனால், முதல்வர் விஜயின் பேச்சு சினிமா ஷூட்டிங் போல இருந்தது என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், கரூரில் துக்கத்திற்காக கருப்பு சட்டை அணிந்து வந்த முதலமைச்சரின் உடல் மொழியில் எந்த துக்கமும் வெளிப்படவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார். குருட்டு யோகம், சினிமா மோகத்தை வைத்து தான் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!
அதிமுகவின் ஆறு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது ஊழல் தான் என்றும் களவாணிதனம் தான் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் சினிமா கிளைமாக்ஸ் இல் பேசுவது போல் கத்தி பேசுகிறார் என்றும் இல்லாவிட்டால் பேசவே மறுக்கிறார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன விஜய் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ளதை மறந்து பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!