புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை வழங்கி அந்த பொருட்களின் பயன்பாட்டை விவசாயிகளுக்கு எடுத்துரைப்பதை பார்வையிட்டார். மேலும் இதில் ராட்சத ட்ரோன் மூலம் விளைநிலங்களுக்கு மருந்து தெளிப்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்: இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆனால் இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான், எந்த இந்துக்களை இங்கு வாழவிடவில்லை, என்று பவன் கல்யாண் சொல்ல வேண்டும். ஆந்திராவில் வேண்டுமானால் அது போல் பிரச்சனை, தமிழ்நாட்டில் அது போன்ற பிரச்சனைகள் இல்லை. இன்று அவர்களையும் முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடன் அரசின் சாதனை. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக இருப்போமேயானால் இவர்கள் இன்று முருகவேசம் போட்டிருக்க முடியாது.
இதையும் படிங்க: விஜய் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம்.. திமுக - தவெக இடையே கடும் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு..!

ஆன்மீகம் இங்கு தலைத்திருக்கிறது என்ற காரணத்தினால் தான் தமிழ் கடவுள் முருகனை தமிழர்களின் இதயத்தில் ஏந்தி உள்ளார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழர்களுக்கு யார் வேஷம் போடுகிறார்கள் யார் உண்மையானவர்கள் என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும்.இந்த வேடதாரிகளை அவர்கள் நம்ப மாட்டார்கள். பவன் கல்யாண் ஆந்திராவை போய் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் பவன் கல்யாண் தனது சித்து வேலையெல்லாம் காண்பிக்க முடியாது அதற்கு தகுந்த இடம் இது அல்ல அங்கு வெங்கடாஜலபதியை சொல்வார்கள். இங்கு வந்து புதுசாக முருகன் கோசம் போட்டு உள்ளார் பவன் கல்யாணி போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. அண்ணாமலைக்கு தெரிந்த வசனங்களை பேசி உள்ளார் சாட்டை அடி சவுக்கடி இது எல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்த வசனம்.

வசனங்களைத்தான் அண்ணாமலை அந்த மாநாட்டில் உச்சரித்துள்ளாரே தவிர தமிழக மக்களின் மனநிலையை அவர் உச்சரிக்கவில்லை. அயோத்தியில் என்ன ஆச்சு, அங்கு இந்தியா கூட்டணியில் தான் வெற்றி பெற்றது உத்திரபிரதேசம் என்ன ஆச்சு, ராமர் பிறந்த மண்ணிலே வென்றது இந்தியா கூட்டணி. பாஜக அல்ல. 2026 தேர்தலுக்கும் நேற்று நடந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை, தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கிருத்தவர்களாக இருந்தாலும் பௌத்தர்களாக இருந்தாலும் தங்கள் மனசாட்சி அவர்களுக்கு நன்றாக தெரியும். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு யார் தமிழ்நாட்டை ஆண்டாள் அமைதியாக இருக்கும் யாரிடத்தில் அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் உணர்ந்து தமிழகத்தின் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இவர்களின் போலி வேடம் எடுபடாது.

திருநீரும் உத்திராட்சமும் அணிந்து பள்ளிக்கு செல்வதை அண்ணாமலை அவர்களது மாநிலத்திற்கு சென்று நடைமுறைப்படுத்தி காட்டட்டும் இங்கு நாங்கள் எந்தவித மத கலாச்சாரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். அனைத்து மாணவர்களும் ஒன்றுதான் அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் கலாட்டாவை உருவாக்கி அங்கு பயங்கரவாதத்தை உருவாக்கி சண்டை சச்சரவை உருவாக்கி சந்தடி சாக்கில் நுழைந்தார்கள். அப்படி பாஜகவினர் தமிழ்நாட்டில் நுழைவதற்கு திராவிட மாடல் அரசு எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.

தமிழ் கடவுள் முருகனை பாஜக இந்து முன்னணியினர் ஐகான் செய்து எங்கு கொண்டு போவார்கள். தமிழ்நாட்டை விட்டு முருகனை எங்கும் கொண்டு செல்ல முடியாது. வேறு மாநிலங்களில் முருகன் கோஷம் போட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கோஷம் இருக்கிறது. கேரளாவில் ஐயப்பனுக்கும் ஆந்திராவில் வெங்கடசலபதிக்கும் மைசூரில் சாமுண்டீஸ்வரிக்கும் தான் கோஷம் போட முடியும். அதனால் முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச் செல்ல முடியாது அவர் நம்மிடம் தான் இருப்பார். நம்மோடு தான் இருப்பார்.
இதையும் படிங்க: திமுக காரங்க கமுக்கமா மாநாட்டுல கலந்துப்பாங்க.. ஒரே போடாக போட்ட தமிழிசை..!