'உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு... உலக நாயகனே... கண்டங்கள் கண்டு வியக்கும் - இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்' உண்மையில் இந்த அருமையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் தான் இன்று உலக நாயகனில் இருந்து விண்வெளி நாயகனாக மாறிய கமல் ஹாசன்.

இப்படி இன்று ரஜினிக்கு 'உன் அழும்பை பார்த்தவன் உன் அப்பன் விசிலை கேட்டவன்' என பாடல் இருக்கிறதோ அதே போல் கமலுக்கு இந்த பாட்டு. இந்த பாடலில் அடுத்ததாக வரும் வரியில் ' நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசியக் கவிஞன்' என்று சொல்ல தக்கதாக தனது குழந்தை பருவத்தில் இருந்து நடிப்பில் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அந்த வகையில், கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்தை விசிட் அடித்த சுனாமி.. தண்ணீரில் தத்தளித்து உயிர் தப்பிய பட குழுவினர்..!
இப்படிப்பட்ட கமல் ஹாசன், திரையுலகில் நடித்த படங்கள் தான் அவருக்கு இத்தனை ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக இதுவரை தமிழ் சினிமாவில் மட்டும், அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும்,

நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், காதலா காதலா, தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இப்படிப்பட்ட கமல் ஹாசனுக்கு எப்படி ரசிகர்கள் அதிகமோ அதே அளவிற்கு சினிமா நட்சத்திர ரசிகர்களும் அதிகம். அதற்கு உதாரணம் சமீபத்தில் நடந்த தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் பொழுது கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியது தான். அவர் பேசுகையில், கமல்ஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை அவர் என்னை கட்டி அணைத்து விட்டு சென்றார். அதனாலேயே நான் மூன்று நாட்கள் குளிக்கவில்லை. அந்த அளவிற்கு கமல்ஹாசனை எனக்கு பிடிக்கும் என்றார்.

தற்பொழுது அவரை போலவே ஒருவர் தனக்கு கமல் ஹாசனை எவ்வளவு பிடிக்கும் என்பதை குறித்து பேசியுள்ளார். அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஹிட் ஆன 'சீதாராமன்' படத்தில் துல்கர் சல்மானுக்கு கதாநாயகனாக நடித்த நடிகை மிருனாள் தாகூர் தான். குறிப்பாக இவர், இந்தி மற்றும் மராத்தி மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், 2012ம் ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான "முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்" என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.

பின்பு, 2014ம் ஆண்டு தாக்கூர் மராத்தி இயக்கத்தில் வெளியான திரைப்படமான "விட்டி தண்டு" படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பாலிவுட்டின் கலக்கலான சின்னத்திரை நாயகியாக வலம் வந்த மிருணாள் தாக்கூர் தெலுங்கு படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "ஹாய் நானா" என்ற படத்தை அடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இப்படிப்பட்ட மிருனாள் தாகூர் கமல் ஹாசனுடன் நடிக்க ஆசை என தெரிவித்திருக்கிறார்.

இதனை குறித்து தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " எனது சிறு வயதில் இருந்தே நடிகர் கமல்ஹாசன் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படங்களையும் அவரது ஸ்டைல்களையும் அதிகமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். என்னதான் நான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருந்தாலும், இன்று பல நடிகர்களுடன் நடித்தாலும் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

குறிப்பாக அவருடன் நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் நடனமாடவாவது எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என மிகுந்த ஆவலுடன் இருப்பதோடு அவருடன் நடிப்பதற்காக என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எனது திறமைகளையும் வளர்த்து வருகிறேன் " என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் திரையில் வந்த நடிகர் விஜயகாந்த்.. படைத்தலைவன் படத்தைக் குறித்து கண்ணீர் மல்க பேசிய பிரபலங்கள்..!